close
Choose your channels

கமல் வீட்டு முன் திடீர் போராட்டம்: மாணவர்களும் கலந்து கொண்டதால் பரபரப்பு

Friday, July 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்க்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த நிகழ்ச்சியை நடத்தி வரும் கமல்ஹாசனையும், அதில் பங்கேற்று உள்ளவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சியினர் சமீபத்தில் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர் என்பதை பார்த்தோம்
இதுகுறித்து கமல்ஹாசன் நேற்று முன் தினம் இரவு பத்திரிகையாளர்களிடம் இந்த நிகழ்ச்சி குறித்தும், சமூகத்திற்கு இந்த நிகழ்ச்சி என்ன சொல்ல வருகிறது என்பது குறித்தும் விரிவாக விளக்கினார்.
இந்த நிலையில் சற்று முன்னர் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்களும், ஒருசில மாணவர்களும் கமல் வீட்டு முன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீரழிவை ஏற்படுத்துவதால் இந்த நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டு வருகின்றனர். இதனால் ஆழ்வார்ப்பேட்டை கமல் வீடு அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த போராட்டத்தினால் கமல் வீட்டுக்கு எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிடாமல் தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் காவல்துறையினர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.