close
Choose your channels

சசிகலா மீது எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. ஆனால் அவர்தான் முதல்வர். சு.சுவாமி

Thursday, February 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாஜக முத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி சற்றுமுன்னர் பிபிசி ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் சசிகலா முதல்வர் பதவியேற்பது குறித்து கூறும்போது, 'சசிகலா மீது எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. நான் தான் அவர் மீது ஊழல் வழக்கை போட்டேன். அந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் சில நாட்களில் வரவுள்ளது. இருந்தாலும் சட்டப்படி அவர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்' என்று கூறினார்.

மேலும் கவர்னர் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நிச்சயம் சென்னையில் இருந்திருக்க வேண்டும். அவர் சென்னையில் இல்லாததை கடுமையாக கண்டிக்கின்றேன். அதிமுக எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்பட்ட சசிகலாவுக்கு நிச்சயம் முதல்வர் பதவிப்பிரமாணம் செய்து வைத்து சட்டப்படி கவர்னர் நடந்திருக்க வேண்டும் என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.