close
Choose your channels

மு.க.ஸ்டாலினைவிட அவரது மனைவி நல்லவர். சுப்பிரமணியன் சுவாமி

Thursday, February 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி இன்று பிபிசி ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டி ஃபேஸ்புக் லைவ் மூலம் சற்று முன்னர் ஒளிபரப்பப்பட்டது.

இந்த பேட்டியில் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி இருக்கும் நிலையில் கட்சியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள செயல்தலைவர் ஸ்டாலின் குறித்து என்ன நினைக்கின்றீர்கள் என்று கேட்ட கேள்விக்கு தனக்கு ஸ்டாலினுடன் அதிக பழக்கமில்லை என்றும் அவரது அரசியல் நடவடிக்கை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார்.

மேலும் ஸ்டாலினை விட அவரது மனைவி நல்லவர் என்றும், அவரது குடும்பத்தில் அனைவரும் கடவுளை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அவர் மட்டும் கோவில்களுக்கு சென்று கடவுளை வணங்கி வருவதாலும், துர்கா என்ற பெயருக்கேற்ப நடந்து கொள்வதாலும் அவரை நல்லவர் என்று தான் கூறுவதாக தெரிவித்தார். ஸ்டாலினும் கடவுளை வணங்கி தன்னை இந்து கூறினால் அவரையும் நல்லவர் என்று தான் கூறுவேன் என்றும் சுவாமி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.