close
Choose your channels

ஜெயலலிதா பங்களா அருகே ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் பரபரப்பு

Wednesday, April 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது அவ்வபோது ஓய்வு எடுக்கும் இடம் சிறுதாவூர் பங்களா என்பது அனைவரும் அறிந்ததே. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இந்த பங்களா, அவர் உயிருடன் இருந்தவரை கடும் பாதுகாப்பில் இருந்தது. அவர் மறைந்த பின்னர் அவருடைய மற்ற சொத்துக்கள் போலவே இந்த பங்களாவுக்கும் பாதுகாப்பு குறைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த பங்களாவின் அருகே சற்று முன்னர் தீவிபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சிறுதாவூர் பங்களாவுக்குப் பின்புறம் உள்ள புல்வெளிப் பகுதியில் தீடீரென தீ பற்றியதாகவும், இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக இருந்ததாகவும் வந்த தகவலை அடுத்து உடனடியாக அந்த பகுதிக்கு சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீவிபத்தால் சிறுதாவூர் பங்களாவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.