close
Choose your channels

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இணையும் ரஜினி-விஜய்?

Saturday, March 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் மிக பிரமாண்டமான படமான 'பாகுபலி 2' படத்தின் ரிலீஸ் தேதியை உலகில் உள்ள சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் சென்னையில் நடைபெறவுள்ளது

இந்த இசை வெளியீட்டு விழாவில் கோலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளையதளபதி விஜய் ஆகியோர் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வருகிறது.

'பாகுபலி 2' இசை விழாவில் ரஜினி, விஜய் கலந்து கொள்வது இன்றுவரை உறுதி செய்யப்படவில்லை எனினும் இருவரையும் விழாவிற்கு அழைக்க 'பாகுபலி 2' குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும், எஸ்.எஸ்.ராஜமெளலி மீது இருவருக்கும் மிகுந்த மரியாதை உள்ளதால் இந்த விழாவில் கலந்து கொள்ள இருவரும் ஒப்புக்கொள்வர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.