close
Choose your channels

மீண்டும் ரசிகர்களை சந்திப்பது எப்போது? சென்னை திரும்பிய ரஜினி பேட்டி

Friday, June 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 28ஆம் தேதி முதல் மும்பையில் நடைபெற்ற 'காலா' திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த பின்னர் நேற்று சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, ''காலா' திரைப்படத்தின் படப்பிடிப்பு திருப்திகரமாக நடந்து கொண்டிருக்கின்றது. முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக வரும் 24ஆம் தேதி மீண்டும் மும்பை செல்கிறேன். மேலும் 'இன்னும் இரண்டு மாதங்களில் மற்ற மாவட்ட ரசிகர்களை சந்திப்பேன்' என்று கூறினார்.

ரஜினிகாந்த் இதுவரை திருச்சி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், பாண்டிச்சேரி, காரைக்கால், கரூர், சிதம்பரம், பெரம்பலூர், திண்டுக்கல், திருவாரூர் உள்பட 17 மாவட்ட ரசிகர்களை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.