close
Choose your channels

அரசியலுக்கு முன் சர்வே எடுத்தாரா ரஜினிகாந்த்?

Friday, June 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது ரசிகர்களை நேரில் சந்தித்து புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில் பேசியபோது ஒருசில அரசியல் குறித்த கருத்துக்களை பேசினார். இந்த பேச்சில் இருந்து அவர் அரசியலுக்கு விரைவில் தனிக்கட்சி ஆரம்பித்து வருவார் என்று உறுதியாக நம்பப்படுகிறது. இந்த முறை ரஜினியின் பேச்சில் உறுதி தென்பட்டதால் ஒருசில கட்சித்தலைவர் அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்று குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னர் தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை என்ன? தான் அரசியலுக்கு வந்தால் எந்தமாதிரியான ரிசல்ட் கிடைக்கும், அரசியலுக்கு வருவதற்கு இது தகுந்த சூழ்நிலை தானா என்று பெங்களூரை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திடம் சர்வே எடுக்க ஒப்படைத்திருந்தார் என்று கூறப்படுகிறது
மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள், மற்றும் சில பத்திரிகையாளர்கள் இந்த சர்வேயை எடுத்ததாகவும், இதன்முடிவு ரஜினி அரசியலுக்கு வருவதற்கு இது சாதகமான சூழல்தான் என்று வெளிவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த சர்வேயை அடிப்படையாக வைத்து ரஜினி தனிக்கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி என்றும், அனேகமாக வரும் செப்டம்பரில் ரஜினியின் அரசியல் கட்சி பெயர் மற்றும் கொடி அறிவிக்கப்படும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.