close
Choose your channels

ரஜினியிடம் பேசிய அந்த ஒரு நிமிடம். இளம் இயக்குனர் பிரமிப்பு

Wednesday, April 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் இளம் இயக்குனர்களின் படங்கள் கடந்த சில மாதங்களாகவே ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு வெற்றி பெற்று வருகிறது. இந்த இளம் இயக்குனர்களை போனிலும் நேரிலும் அழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டி வருவதும் நாம் அறிந்ததே.

இந்த வகையில் தற்போது ரஜினியிடம் பாராட்டு பெற்றவர் '8 தோட்டாக்கள்' இயக்குனர் ஸ்ரீகணேஷ். கடந்த வாரம் ரஜினி அலுவலகத்தில் இருந்து '8 தோட்டாக்கள்' படத்தை பார்க்க விரும்புவதாக ஒரு மெயில் வந்ததாகவும், இதன் காரணமாக அவருக்காக ஒரு சிறப்பு காட்சி இந்த படம் திரையிடப்பட்டதாகவும் ஸ்ரீகணேஷ் கூறினார்.

பின்னர் நேற்று திடீரென ரஜினியிடம் இருந்து போன் அழைப்பு வந்தபோது தனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்று கூறிய ஸ்ரீகணேஷ், '8 தோட்டாக்கள்' படத்தின் கதை சொன்ன விதம் தன்னை மிகவும் கவர்ந்ததாக ரஜினி பாராட்டியதாக கூறினார். குறிப்பாக எம்.எஸ்.பாஸ்கர், நாசர் கேரக்டர் குறித்து ரஜினி பாராட்டியதாகவும், அவரிடம் பேசிய அந்த ஒரு நிமிடம் தனக்கு பிரமிப்பாக இருந்ததாகவும் ஸ்ரீகணேஷ் தெரிவித்துள்ளார்.

'8 தோட்டாக்கள்' வெற்றியை அடுத்து ஸ்ரீகணேஷ் தற்போது அதர்வா நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.