close
Choose your channels

ஏழைகளின் முதல்வரே! ரஜினி போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு

Saturday, May 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கடந்த ஐந்து நாட்களாக தனது ரசிகர்களை சந்தித்த நிலையில், ரசிகர்கள் முன் அரசியலுக்கு வருவது குறித்து பரபரப்பாக பேசினார். போர் வரும்போது களத்தில் இறங்குவோம் என்று அவர் கூறியது தேர்தலின்போது அரசியல் களத்தில் குதிக்க அவர் முடிவு செய்திருப்பதாக அர்த்தம் எடுத்து கொள்ளப்பட்டு பலவித விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் ரஜினியின் ரசிகர்கள் விமர்சனங்களை காதில் போட்டு கொள்ளாமல் ரஜினியின் அரசியல் பிரவேச அறிக்கைக்காக காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர். ஒருசிலர் ஆர்வ மிகுதியால் ரஜினியை முதல்வராகவே சித்தரித்து தமிழகத்தின் பல பகுதிகளில் போஸ்டர் ஓட்டவும் ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரம் ஒன்றில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த போஸ்டரில் 'பணமும் வேண்டாம், பதவியும் வேண்டாம், எம்.எல்.ஏ பதவியும் வேண்டாம், எம்பி பதவியும் வேண்டாம், அதுக்கும் மேல, தொண்டன் என்ற பதவியே போதும் தலைவா, ஏழைகளின் முதல்வரே, மாற்றம் உங்களால் மலரட்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இனி ரஜினியே நினைத்தாலும் ரசிகர்கள் மனதில் உள்ள அரசியல் கனவை அழிக்க முடியாது என்றே ரஜினி ரசிகர்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.