close
Choose your channels

ரஜினியின் '2.0' படத்தின் கிளைமாக்ஸ் முடிந்துவிட்டதா?

Thursday, April 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் '2.0' படத்தை பிரமாண்டமாக இயக்கி வரும் இயக்குனர் ஷங்கர் கடந்த 45 நாட்களாக டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் படப்பிடிப்பை நடத்தி முடித்து தற்போது சென்னை திரும்பியுள்ளார். இந்த படப்பிடிப்பில் '2.0' படத்தின் கிளைமாக்ஸ் முடிந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தற்போது டெல்லியில் கடுமையான வெயில் அடித்து வந்தபோதிலும் ரஜினிகாந்த், அக்சயகுமார், எமிஜாக்சன் உள்பட படக்குழுவினர் கொடுத்த ஒத்துழைப்பின் காரணமாக வெற்றிகரமாக ஷங்கர் கிளைமாக்ஸை முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த படப்பிடிப்பு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவுக்கு பெரும் சவாலாக இருந்ததாகவும், ஹெலிகேமரா உள்பட ஒருசில சாதனங்கள் எதிர்பாராமல் சேதம் அடைந்திருந்தபோதிலும் படமாக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் திருப்திகரமாக வந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
'2.0' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள தீம்பார்க்கில் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. ரஜினிகாந்த், எமிஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இதில் படமாக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் விரைவில் '2.0' படக்குழுவினர் பொலிவியா நாட்டிற்கு செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.