close
Choose your channels

டெல்லியில் கைதான சுகேஷ் சந்திரா யார் என்றே எனக்கு தெரியாது! டிடிவி தினகரன்

Monday, April 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒன்றுபட்ட அதிமுகவின் சின்னமான 'இரட்டை இலை'யை கைப்பற்றும் அணியே உண்மையான அதிமுக என பொதுமக்கள் கருதுவார்கள் என்பதால் சசிகலா, ஓபிஎஸ் அணிகள் அந்த சின்னத்தை பெற கடுமையாக போராடி வருகின்றன. இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக டெல்லியில் இன்று காலை சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டார். இதனால் டெல்லி போலீசார் தினகரன் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரா என்பவர் யார் என்றே தனக்கு தெரியாது என்றும், கட்சியை அழிக்கும் நோக்கத்துடன் யாரோ திட்டம் போட்டு செயல்படுவதாகவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர லஞ்சம் கொடுத்ததாக வந்த புகாரில் சம்மன் அனுப்பினால் அதை சட்டப்படி சந்திக்க தயாராக இருப்பதாகவும் தினகரன் மேலும் கூறியுள்ளார்.

மேலும் இன்று பெங்களூர் சென்று சசிகலாவை சந்திக்க பெங்களூரு செல்வதாக கூறிய தினகரன், அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என்று யாரும் என்னிடம் கூறவில்லை என்றும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது என்ற பேச்சுகே இடமில்லை என்றும் தினகரன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.