close
Choose your channels

சூர்யாவின் மிகப்பெரிய மனிதாபிமான உதவி

Tuesday, April 5, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'S3' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திராவில் உள்ள சித்தூர் அருகே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சித்தூரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு சமீபத்தில் சூர்யா தனது காரில் சென்று கொண்டிருக்கும்போது, சாலையில் இரவு நேரத்தில் கணவன் மற்றும் மனைவி விபத்துக்குள்ளாகி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததாகவும், அதனை பார்த்த சூர்யா உடனே தன்னுடைய காரில் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.


அந்த மருத்துவமனையில் முதலுதவி முடிந்தபின்னர் திருப்பதியில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை அனுப்பும் வரையிலும் உடன் இருந்தாராம் சூர்யா.

சூர்யாவின் இந்த மிகப்பெரிய மனிதாபிமான உதவியால் விபத்துக்குள்ளான இரண்டு பேர்களின் உயிர் காப்பாற்றப்பட்ட செய்தி ஆந்திரா முழுவதும் வெகுவேகமாக பரபரப்புடன் பரவி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.