close
Choose your channels

சி3 திரைப்படத்தை செல்போனில் பதிவு செய்த 8 பேர். காவல்துறை அதிரடி நடவடிக்கை

Friday, February 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சி3' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை ரிலீஸ் தினத்தன்றே ஆன்லைனில் வெளியிடவுள்ளதாக இணையதளம் ஒன்று சவால் விட்டது.

இதனை தடுக்கும் வகையில் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் ஏற்பாட்டின் பேரில் தமிழகமெங்கும் சி3 திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் தலா 4 பேர் கொண்ட குழு தீவிர
கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.


இந்நிலையில் திருச்சியில் உள்ள ஒரு திரையரங்கில் 'சி3' படத்தை சட்டவிரோதமாக செல்போனில் சிலர் பதிவு செய்வதாக வந்த தகவலை அடுத்து விஷால் ஏற்பாடு செய்த அதிரடி கண்காணிப்பு குழுவினர் 8 பேரின் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருச்சி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.