close
Choose your channels

இயக்குனர் சுசிந்திரனின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

Saturday, May 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'வெண்ணிலா கபடிக்குழு' முதல் 'மாவீரன் கிட்டு' வரை பல வெற்றி படங்களை இயக்கிய கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன் தற்போது தனது அடுத்த படத்தின் தலைப்பை தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

'அறம் செய்து பழகு' என்பது தான் சுசீந்திரன் இயக்கும் அடுத்த படத்தின் தலைப்பு ஆகும். இந்த படத்தில் சந்தீக் கிஷான், மெஹ்ரின் பிர்ஜாதா, விக்ராந்த், ஹரிஷ் உத்தமன், சூரி, அப்புக்குட்டி உள்பட பல நடிக்கவுள்ளனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார். இந்த படத்தின் பாடல் ஒன்றை சமீபத்தில் ஸ்ரேயா கோஷல் பாட இமான் ஒலிப்பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லக்ஷ்மண் குமார் ஒளிப்பதிவில், காசி விஸ்வநாதன் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் விரைவில் வெளியாகும் என்றும் சுசீந்திரன் அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தை அன்னை பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் தயாரிக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.