close
Choose your channels

இயக்குனர் சுசீந்திரன் படத்தின் டைட்டில் திடீர் மாற்றம்

Wednesday, August 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் சுசீந்திரன் சமீபத்தில் 'அறம் செய்து பழகு' என்ற தனது அடுத்த படத்தின் டைட்டிலை அறிவித்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் நேற்று திடீரென மாற்றப்பட்டுள்ளது.

'அறம் செய்து பழகு' என்ற டைட்டிலுக்கு பதிலாக 'நெஞ்சில் துணிவிருந்தால்' என்ற புதிய டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலை இயக்குனர் சுசீந்திரன் தனது சமூக வலைத்தளத்திலும் உறுதி செய்துள்ளார். மேலும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் புதிய டைட்டிலுடன் கூடிய போஸ்டர் ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

விக்ராந்த், சந்தீப் கிஷான், சூரி, மெஹ்ரின் பிர்ஜிதா, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். லட்சுமண் குமார் ஒளிப்பதிவில், காசி விஸ்வநாதன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை அன்னை பிலிம் பேக்டரீஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.