close
Choose your channels

சுசீந்திரன் இயக்கும் அடுத்த படத்தின் தலைப்பு

Thursday, September 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் சுசீந்திரன் தற்போது 'நெஞ்சில் துணிவிருந்தால்' என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தை அவர் தீபாவளி தினத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கின்றார் என்பதும் ஏற்கனவே நாம் பார்த்ததுதான்.

இந்த நிலையில் சுசீந்திரன் மற்றொரு படத்தையும் இயக்கி வருகிறார். சூரி முக்கிய கதாபாத்திரத்திலும், முழுக்க முழுக்க புதுமுகங்களும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 60% முடிந்துவிட்டது. 

இந்த படத்தின் தலைப்பு நாளை காலை 10 மணிக்கு வெளியிடவுள்ளதாக இயக்குனர் சுசீந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். மேலும் இந்த தலைப்பை அவரது பெற்றோர்கள் வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஆக மொத்தத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் இந்த வருடமே இரண்டு படங்கள் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.