close
Choose your channels

நீட் தேர்வு குறித்து சூர்யாவுக்கு என்ன தெரியும்? தமிழிசை செளந்தரராஜன்

Saturday, September 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அரியலூர் அனிதாவின் மரணத்திற்கு பின்னர் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் கொளுந்துவிட்டு எரிகிறது. மாணவர்கள் அனைவரும் தெருவில் இறங்கி போராட்டம் நடத்துவதால் பெரும்பாலான கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று நடிகர் சூர்யா, 'நீட் தேர்வுக்கு எதிரான தனது கருத்துக்களை பதிவு செய்தார். கல்வி மற்றும் தேர்வு முறைகளில் நவீன தீண்டாமை நிலவுவதாகவும், பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கல்வியை மாற்றினால் மட்டுமே மீண்டுமொரு அனிதா உருவாகாமல் தடுக்க முடியும் என்றும் அவர் கூறியிருந்தார்

சூர்யாவின் கருத்துக்கு பதில் கூறியுள்ள பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், 'நடிகராக உள்ள சூர்யாவுக்கு மருத்துவர்களின் நீட் தேர்வுபற்றி எப்படி முழுமையாகத் தெரியும்? சூர்யா போன்றோர் கோடிக்காகப் பணியாற்றும்போது நாங்கள் தெருக்கோடியில் பணியாற்றினோம். நீட் தேர்வு கிராமப்புறம் உள்ளிட்ட அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது' என்று தெரிவித்தார்.

தமிழிசையின் கருத்துக்கு சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.