close
Choose your channels

சென்னை சில்க்ஸ் தீ விபத்து எதிரொலி: அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் வெளியேற்றம்

Thursday, June 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை தி.நகரிலுள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடம் தொடர்ந்து இரண்டாவது நாளாக எரிந்து வருகிறது. கட்டிடத்தின் பெரும்பகுதி இடிந்துவிட்ட போதிலும் தீ இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்பதால் சுமார் 450 தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் தீவிபத்து காரணமாக தி.நகரின் பல பகுதிகளில் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள், ஆஸ்துமா நோயாளிகள் மூச்சுவிடவே சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் போலீசாரின் அறிவுறுத்தலின்படி சென்னை சில்க்ஸ் கட்டிடத்திற்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், தங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். புகை முற்றிலுமாக நீங்கியவுடன் அவர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த தீவிபத்தால் தி.நகர் பகுதியில் ரூ.50 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று சென்னை திநகர் வர்த்தகச் சங்கத்தின் செயலாளர் சாரதி தெரிவித்துள்ளார். போலீசாரின் அறிவுறுத்தலின்படி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன என்றும் கடைகளை திறக்க போலீசாரின் மறு உத்தரவுக்காக வியாபாரிகள் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.