close
Choose your channels

ஈசிஆர் ரிசார்ட் செல்கிறாரா டிஜிபி?

Friday, February 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் 130 பேர் ஆதரவுஇ கொடுத்திருப்பதாக நேற்று சசிகலா கவர்னரிடம் கூறி ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார் என்ற செய்தி வெளியானது. இந்நிலையில் அந்த 130 எம்.எல்.ஏக்கள் ஈசிஆர் சாலையில் உள்ள ரிசார்ட்டில் அடைத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

சமூக ஊடகங்கள் மற்றும் புலனாய்வு பத்திரிகைகளின் தகவலின்படி எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ரிசார்ட்டில் ஜாமர் வைத்து செல்போன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும், இண்டர்நெட், டிவி, உள்பட அனைத்து தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ரிசார்ட்டில் பணிபுரியும் ஊழியர்கள் உள்பட யாரையும் வெளியே அனுமதிக்காமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை தமிழக பொறுப்பு ஆளுனர் டிஜிபியிடம் அதிமுக எம்.எல்.ஏக்கள் இருக்கும் இடம் குறித்து கேள்வி எழுப்பியதாகவும், தேவைப்பட்டால் டிஜிபியே நேரடியாக ஈசிஆர் ரிசார்ட் சென்று எம்.எல்.ஏக்களின் இருப்பிடத்தை அறிந்து வர ஆலோசனை கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே டிஜிபி அதிரடியாக ஈசிஆர் ரிசார்ட் சென்றால் எம்.எல்.ஏக்கள் அங்கு இருக்கின்றார்களா? இருந்தால் அவர்களின் மனநிலை என்ன என்பது குறித்த உண்மை வெளிவருமா? என்பதை அறிய தமிழக மக்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.