close
Choose your channels

கட்சியில் சேர்ந்த சில மணி நேரத்தில் பதவியை பெற்ற தினகரன். என்ன நடக்கிறது அதிமுகவில்?

Wednesday, February 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயலலிதாவால் துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட டிடிவி தினகரன் மற்றும் டாக்டர் வெங்கடேஷ் ஆகிய இருவரையும் சற்று முன்னர் அதிமுகவில் இணைத்து கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்தார். அதுமட்டுமின்றி கட்சியில் இணைந்த ஒரு சில மணி நேரத்தில் டிடிவி தினகரனுக்கு அதிமுக துணை பொதுச்செயலாளர் பதவியும் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று சிறைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கட்சியின் முழு கட்டுப்பாடும் துணைச்செயலாளர் கைக்கே வந்துவிடும் என்பதால் டிடிவி தினகரன் கையில் கட்சியை ஓப்படைக்கவே அவர் மீண்டும் கட்சிக்குள் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை அதிமுகவில் இல்லாத துணைப்பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி அதில் தனது சகோதரி மகனையே உட்கார வைத்துள்ள சசிகலாவின் இந்த நடவடிக்கைக்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.