close
Choose your channels

திரையரங்க உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்!

Thursday, July 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி, மாநில அரசின் கேளிக்கை ஆகிய இரட்டை வரி விதிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த திங்கள் முதல் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டன. கடந்த நான்கு நாட்களாக நடந்து வந்த இந்த வேலைநிறுத்தத்தால் பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதோடு, திரையரங்க ஊழியர்கள், கேண்டீன்கள், பார்க்கிங் ஊழியர்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திரையுலகினர் முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர்கள் ஆகியோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று மதியம் கேளிக்கை வரியை ரத்து செய்வது குறித்து தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள் வேலுமணி, வீரமணி,கடம்பூர் ராஜு ஆகியோர்களுடன் திரைத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தமிழகத்தில் திரையரங்க உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் வழக்கம்போல் திரையரங்குகள் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.