close
Choose your channels

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் அறிவிப்பு

Saturday, June 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் கோடை வெயில் கடந்த சில மாதங்களாக கொளுத்தி வந்த நிலையில் சமீபத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்துள்ளது.

இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டியுள்ள தெற்கு ஒடிசா கடல்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள வெப்பச்சலனத்தால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.