close
Choose your channels

டெல்லி பல்கலையில் தமிழக மாணவர் தற்கொலை. அதிர்ச்சி தகவல்

Monday, March 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகி கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அந்த பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்த தமிழக மாணவர் ஒருவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஜே.என்.யூ பல்கலையில் எம்.பில் படித்து கொண்டிருந்த சேலத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற மாணவர் சற்று முன்னர் விடுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இவர் கடந்த வருடம் தற்கொலை செய்து கொண்ட மாணவர் ரோஹித் என்ற மாணவரின் தற்கொலை மரணத்திற்கு நீதிகேட்டு போராடிவரும் மாணவர் குழுவில் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை செய்து கொண்ட முத்துகிருஷ்ணன் தலித் பிரச்சனைகளுக்காக முன் நிற்பவர் என்றும் அதுமட்டுமின்றி பல்கலைக்கழகத்தின் புத்திசாலி மாணவர்களில் ஒருவர் என்றும் ஜே.என்.யூ பல்கலையை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்

மேலும் முத்துக்கிருஷ்ணனின் சமூக வலைத்தள பக்கத்தில் எம்ஃபில் மற்றும் முனைவர் பட்ட படிப்புகளுக்கான சேர்க்கையில் பாரபட்சம் காட்டப்படுவதாக பதிவுகள் செய்துள்ளார். எனவே அவருக்கு கடந்த சில நாட்களாக மன உளைச்சல் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மாணவர் முத்துகிருஷ்ணனின் தற்கொலை சக மாணவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.