close
Choose your channels

ஐ.என்.எஸ் போர்க்கப்பலில் அரசியல் ஆலோசனை செய்யும் அதிமுக எம்.எல்.ஏக்கள்

Tuesday, April 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னை வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பு அரசியல் குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக என ஊகிக்கப்பட்ட நிலையில் இன்று அனைத்து எம்.எல்.ஏக்களும் ஐ.என்.எஸ் போர்க்கப்பலில் பயணம் செய்கின்றனர். இதற்காகவே எம்.எல்.ஏக்கள் வரவழைக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த பயணத்தின்போது அதிமுக சசிகலா அணி மற்றும் ஓபிஎஸ் அணி இணைவது குறித்து அனைத்து எம்.எல்.ஏக்களிடம் கருத்து கேட்க மூத்த அமைச்சர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ள இந்த போர்க்கப்பலில் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், நிலோபர் கபில் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் உள்பட 122 எம்.எல்.ஏக்களும் பயணம் செய்யவுள்ளனர்.
சென்னை துறைமுகத்துக்கு தற்போது வந்துள்ள இந்த கப்பல், நவீன தொழில்நுட்பத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.