close
Choose your channels

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய சுற்றறிக்கை

Thursday, April 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் சமீபத்தில் முடிந்து அதன் தலைவராக தேர்வு செய்யப்பட்ட விஷால் உள்பட அனைத்து நிர்வாகிகளும் சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நிமிடம் முதல் தங்களது பணியை தொடங்கிவிட்டதாகவும், ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் நல்லது செய்வதே தங்களது பணி என்றும் பதவியேற்கும்போது கூறினர். இந்நிலையில் தற்போது அவர்கள் கூறியபடியே தங்கள் பணியையும் தொடங்கிவிட்டனர்.
சற்றுமுன்னர் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை சென்றுள்ளது. அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அன்பார்ந்த தயாரிப்பாளர்களுக்கு, தங்களது நிலுவையில் உள்ள சாட்டிலைட் விற்காத, வெளியிடப்படாத அல்லது மானியம் கிடைக்கப்பெறாத படங்களின் விவரத்தை கீழ்க்கண்ட எண்/மின்னஞ்சலில் வரும் வெள்ளி மாலை 6.00 மணிக்குள் தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.