close
Choose your channels

அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பர் திடீர் தற்கொலை!

Monday, May 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொடநாடு எஸ்டேட் கொலை, கொலையாளிகள் என சந்தேகிக்கப்பட்டவர்களின் விபத்து உள்ளிட்ட பல மர்ம சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பர் இன்று தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளத்

கடந்த மாதம் 7ஆம் தேதி தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தபோது, அவருடைய நண்பரும் நாமக்கல் அரசு ஓப்பந்தகாரருமான சுப்பிரமணியன் என்பவரின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் இன்று சுப்பிரமணியம் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. வருமான வரித்துறையினர் ரெய்டு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது தற்கொலை செய்யப்படும் அளவுக்கு மிரட்டப்பட்டாரா? என்பது குறித்து பல்வேறு சந்தேகக் கேள்விகள் எழுந்துள்ளது.

விஜயபாஸ்கரின் மனைவியிடம் சமீபத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் இந்த தற்கொலையும் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.