close
Choose your channels

மெர்சல் ஆடியோ விழாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் தளபதி

Friday, August 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வரும் 'மெர்சல்' படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளிவந்து இணையதளங்களை மிரட்டிய நிலையில் நாளை மறுநாள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த படத்தின் ஆடியோ விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளது.

ஸ்ரீதேனாண்டால் நிறுவனத்தின் 100வது படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றுள்ளது மட்டுமின்றி ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தளபதி விஜய் ஆகியோர்களின் 25வது ஆண்டின் திரைப்படம் என்பதால் இந்த விழா முப்பெரும் விழாவாகவும், அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

மேலும் இந்த விழாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு விஜய் பதிலளிக்கும் நிகழ்ச்சி ஒன்றும் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த விழாவை தொகுத்து வழங்கவுள்ள விஜே ரம்யா, விஜய் ரசிகர்களிடம் கேள்விகளை டுவிட்டர் மூலம் அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார். சிறப்பான கேள்விகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கு விஜய் பதிலளிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் அரசியல் எண்ட்ரி குறித்தும் ரசிகர்களிடம் இருந்து கேள்வி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவிற்கு முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும், இந்த விழாவை முற்றிலும் புதுமையாகவும் வித்தியாசமாகவும் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஸ்ரீதேனாண்டாள் நிறுவனத்தின் சி.இ.ஒ ஹேமா ருக்மணி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.