close
Choose your channels

விஜய்யின் 'மெர்சல்' படத்தின் முக்கிய பணி இன்று ஆரம்பம்

Saturday, July 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும்போதே இன்னொரு பக்கம் இந்த படத்தின் முதல் பாதியின் டப்பிங் தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பஞ்சாயத்து தலைவர், டாக்டர் மற்றும் மேஜிக்மேன் என மூன்று வித்தியாசமான வேடங்களில் விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு 50%க்கும் மேல் முடிந்துவிட்டதால்,இந்த படத்தின் முதல் பாதியின் டப்பிங் பணிகள் இன்று ஒரு சிறு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த பூஜையில் இயக்குனர் அட்லி, தயாரிப்பாளர் முரளிராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமான 'மெர்சல்' படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் இந்த படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாக வாய்ப்பு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.