close
Choose your channels

சிஸ்டம் கெட்டு போச்சு: ரஜினியின் கருத்துக்கு தம்பித்துரை பதில்

Saturday, May 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று ரசிகர்களிடையே பேசியபோது, ஒருசிலதலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் அனைவரும் திறமையானவர்கள் தான். ஆனால் இங்கு சிஸ்டமே கெட்டு போய் உள்ளது. அரசியல் குறித்து, ஜனநாயகம் குறித்து மக்களோட கண்ணோட்டம் கெட்டுப் போய் உள்ளது. எனவே முதலில் சிஸ்டத்தை சீர்படுத்தபட வேண்டும். ஜனங்களின் மனரீதியை, சிந்தனையை மாற்ற வேண்டும், அதை எல்லாரும் சேர்ந்து செய்ய வேண்டும். அப்படியென்றால் மட்டுமே நாடு நன்றாக இருக்கும்' என்று கூறினார்
ரஜினியின் சிஸ்டம் கெட்டுபோச்சு கருத்துக்கு பாராளுமன்ற துணை சபாநாயகரும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியின் முக்கிய தலைவருமான தம்பித்துரை பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது:
ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறி இருக்கிறார். ஜனநாயக நாட்டில் மக்கள் சேவை செய்வதற்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அது அவரது தனிப்பட்ட உரிமை. ரஜினி பேசும்போது, நாட்டில் சிஸ்டமே சரி இல்லை என்று சொல்லி இருக்கிறார். இது அவரது பார்வை. ஆனால் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி சிறப்பான ஆட்சியாக உள்ளது' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.