close
Choose your channels

'விஐபி 2' படத்தை அடுத்து முடிவுக்கு வந்தது தனுஷின் அடுத்த படம்

Thursday, July 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் நடித்த 'விஐபி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இம்மாதம் 28ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையியில் தனுஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வடசென்னை' ஆகிய படங்களின் படப்பிடிப்புகளும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்த நிலையில் தனுஷ் நடித்து வரும் 'The Extraordinary Journey of the Fakir' என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்த தகவலை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். எனவே இந்த படமும் இவ்வருட இறுதியில் வெளிவர வாய்ப்பு உள்ளது.

பிரபல ஈரான் இயக்குனர் Marjane Satrapi இயக்கும் இந்த படத்தில் தனுஷ், Berenice Bejo, Erin Moriarty, மற்றும் Barkhad Abdi உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் 'பண்டிட் குவீன்' படத்தின் நடித்த சீமா பிஸ்வாஸ் அவர்களும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.