close
Choose your channels

தமிழகம் கலவர பூமியாகும். மத்திய அமைச்சரே இப்படி மிரட்டுவதா?

Monday, July 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு நாட்டின் மத்திய அமைச்சர் ஒருவரே தமிழகம் கலவர பூமியாகும் என்று மிரட்டியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சரும், தமிழகத்தின் ஒரே பாஜக எம்பியுமான பொன்.ராதாகிருஷ்ணன் தனது சொந்த தொகுதியான நாகர்கோவிலுக்கு இன்று சென்றார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த பொன்ராதாகிருஷ்ணன், 'தமிழகத்தில் இந்து அமைப்பினர் தொடர்ந்து தாக்கப்படுவதாகவும், இந்து அமைப்பினர் மீது தாக்குதலை நிறுத்த தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் நீடித்தால் தமிழகம் கலவர பூமியாக மாறும் என்று தமிழக அரசுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் எச்சரிக்கை செய்தார்.
இரு பிரிவினர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டால் அந்த பிரச்சனை தீர்த்து வைக்கும் முக்கிய பொறுப்பில் உள்ள மத்திய அமைச்சர் ஒருவரே இவ்வாறு கலவர பூமியாகும் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாக்கப்பட்டவர் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று பொறுப்புடன் கூற வேண்டிய அமைச்சர், இவ்வாறு எதிர்மறையாக பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது மட்டுமின்றி அவருக்கு மூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.