close
Choose your channels

ரஜினியை தடுத்தது ஏன்? திருமாவளவன் விளக்கம்

Tuesday, March 28, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை சென்று லைகா நிறுவனத்தின் கலந்து கொள்வதோடு மட்டுமின்றி இலங்கை அதிபரிடம் மீனவர் பிரச்சனை குறித்தும் பேசவிருந்த நிலையில் அவரது பயணத்தை தமிழக அரசியல் தலைவர்கள் சிலபல காரணங்களை கூறி தடுத்துவிட்டனர். ரஜினியும் தனது விளக்க அறிக்கையில் அவர்கள் கூறும் கருத்து தனது ஏற்புடையது இல்லை எனினும் அவர்களுடைய அன்புக்கு கட்டுப்பட்டு பயணத்தை ரத்து செய்வதாக கூறினார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் இலங்கை செல்லவிடாமல் தடுத்தது ஏன் என்று திருமாவளவன் தற்போது விளக்கம் கூறியுள்ளார். 'கிளிநொச்சி, வவுனியா, திரிகோணமலை உள்ளிட்ட பகுதிகளில், போரின்போது காணாமல்போனவர்களின் உறவினர்கள், முப்பது நாள்களுக்கும் மேலாக இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திவருகின்றனர்.
மேலும், ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் 42 நாடுகள் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இதைத் திசை திருப்பவே, இலங்கை அரசு, ரஜினியை அங்கு அழைத்தது. சர்வதேச மன்றத்தில் இலங்கை தப்பிக்காமல் இருக்கவே, ரஜினி இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.