close
Choose your channels

ரஜினியை முதல்வர் ஆக்க தடை செய்தால் பிரதமர் ஆகிவிடுவார்: பிரபல அரசியல் கட்சி தலைவர்

Friday, June 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்தபோது தான் விரைவில் அரசியலுக்கு வருவதை மறைமுகமாக தெரிவித்தார். அதுமுதல் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்களும் அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ரஜினி தமிழர் இல்லை என்பதற்காக அவர் முதல்வராக தடை செய்தால் அவர் இந்திய பிரதமராகிவிடுவார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை ஒரு அரசியல்வாதி என்ற முறையில் வரவேற்கிறேன். தமிழ்நாட்டை தமிழர்தான் ஆளவேண்டும் என்பதெல்லாம் இனி எடுபடாது. மொழி சார்ந்த கொள்கைகள் மட்டுமே சரிவராது.

ரஜினிகாந்த் தமிழரல்லாதவர், மராட்டியர், கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார். தமிழ்நாட்டை ஒரு தமிழர் ஆளவேண்டும் என்பதை விட ஒரு மனிதர் ஆளவேண்டும்.

ரஜினிகாந்தை தமிழக முதல்வராக்க தடை செய்தோமானால் அவர் இந்த நாட்டின் பிரதமராகி விடுவார். ஒரு மாநிலத்தை ஆள தடை செய்தால் அவரை இந்தியாவை ஆள வைத்து விடுவார்கள் என்று தொல் திருமாவளவன் கூறினார்.

திருமாவளவனின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.