close
Choose your channels

இதுதான் இன்றைய மிகச்சிறந்த படம்: கமல்ஹாசன் பெருமிதம்

Wednesday, August 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்றைய சுதந்திர தினத்தில் அரசியல் குறித்த சில பதிவுகளை தெரிவித்திருந்தாலும், சுதந்திர தினம் குறித்தும் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள துப்ரி மாவட்டத்தில் நோஸ்கரா என்ற பகுதி கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பல இடங்களில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ள நிலையில் அந்த பகுதியின் பள்ளியில் உள்ள ஒரு ஆசிரியர் இடுப்ளவு உள்ள தண்ணீரில் நின்று கொண்டு தேசியக்கொடி ஏற்றி சல்யூட் அடித்து சுதந்திர தினத்தை கொண்டாடினார்.

இதுகுறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள கமல்ஹாசன், இதுதான் இன்றையை மிகச்சிறந்த புகைப்படம். இது நம் நாட்டின் நம்பிக்கையின் ஒரு எடுத்துக்காட்டு. அரசியல்வாதிகள் இதுவரை தோல்வி அடைந்துள்ள நிலையில் அவர்கள் இனிமேலாவது சேவை செய்ய வேண்டும் அல்லது பணிநீக்கம் செய்யப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.