close
Choose your channels

மீண்டும் புதிய முதல்வர்? சென்னையில் குவியும் அதிமுக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு

Monday, April 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக பிரேக்கிங் நியூஸ் இல்லாமல் நிம்மதியாக இருந்த தமிழக மக்களை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் தற்போது பிரேக்கிங் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இரட்டை இலைக்காக லஞ்சம் கொடுக்க முயன்ற டிடிவி தினகரன் நாளை கைதாக வாய்ப்பு, தினகரனை சசிகலா சந்திக்க மறுத்ததாக கூறப்படுவது, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் நீக்கம் பற்றிய அறிவிப்பு எந்த நேரமும் வரலாம் என்ற செய்தி, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் அவர்களின் திடீர் சென்னை வருகை ஆகியவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். சென்னை வரும் எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை செய்யவுள்ளதாகவும் நாளைய ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் மாறும் வாய்ப்பும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினகரனை கட்சியில் இருந்து ஓரங்கட்டவும், ஓபிஎஸ் அணியினர்களுடன் மீண்டும் இணைந்து ஒருங்கிணைந்த அதிமுகவாக மாறவும், ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்களில் இருவரில் ஒருவர் முதல்வராகவும் இன்னொரு அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் மாற வாய்ப்பு இருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.