close
Choose your channels

தமிழகத்தை இரண்டாக உடைத்துவிட வேண்டாம். கமல்ஹாசன்

Thursday, February 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களாகவே தமிழக நிலவரம் குறித்து பரபரப்பான கருத்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார். ஜல்லிக்கட்டு பிரச்சனை சமயத்தில் அவரது கருத்துக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது நிலவி வரும் அரசியல் அசாதாரண சூழ்நிலை குறித்து அவர் கூறியதாவது:

தமிழகத்தை இரண்டாக உடைத்துவிட வேண்டாம். என்னை கேட்டால் அகில இந்தியாவும் தமிழ்நாட்டுக்காக அகிம்சை வழியில் போராட வேண்டும். இந்த போராட்டத்தினால் யாரும் உயிரிழக்க மாட்டார்கள். மேலும் அறியாமையில் இருப்பவர்கள் பலர் விழித்தெழுவார்கள்' என்று கூறியுள்ளார்.

இன்னொரு பதிவில் அவர் கூறியபோது, 'பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்துச் சூதாடி இழந்து வருகிறோம். குற்றம் சாட்டுவதை விடுத்து, நாம் குற்றமறக் கடமை செய்வோம். முடியுமா? என கேட்டுள்ளார்.

மேலும் 'சத்யராஜ் பெரியார் பெரியார்னு வாய் கிழியப்பேசும் நாம, இந்த நேரத்துல ஒருd ubsmash ஆவது போட வேண்டாமா.? .நாம் முதலில் மனிதர். அதன் பின்னர்தான் நடிகர்கள்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.