ஓபிஎஸ்- மாஃபா பாண்டியராஜன் சந்திப்பு. நேரில் ஆதரவு தெரிவித்தார்.
Saturday, February 11, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு இதுவரை எம்.எல்.ஏக்கள் மட்டும் ஆதரவு கொடுத்து வந்த நிலையில் அவருக்கு ஆதரவு கொடுக்கும் முதல் கேபினட் அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் தனது ஆதரவை தெரிவித்தார் என்பதை சற்று முன்னர் பார்த்தோம்.
இந்நிலையில் சற்று முன்னர் முதல்வர் ஓபிஎஸ் அவர்களை மாஃபா பாண்டியராஜன் அவருடைய சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
முக்கிய அமைச்சரான மாஃபா பாண்டியராஜன் அவர்களே ஓபிஎஸ் அவர்களின் அணிக்கு வந்துள்ள நிலையில் பெரும்பாலான அதிமுக எம்.எல்.ஏக்கள் இந்த அணிக்கு வருவதற்கான அறிகுறி தெரிவதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
முதல்வரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன், 'அதிமுகவில் பிளவு ஏற்படக்கூடாது என்பது அனைவரது விருப்பம், பன்னீர்செல்வம் தலைமையில் கட்சி கட்டுக்கோப்புடன் இருக்கவேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.