close
Choose your channels

போதை பொருள் விற்பனையில் பிரபல நடிகை: விசாரணைக்கு வருமாறு காவல்துறை நோட்டீஸ்

Thursday, July 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர்கள் சிலர் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வருத்தத்துடன் கூறிய செய்தியை நேற்று பார்த்தோம் (போதை பழக்கத்திற்கு அடிமையான இளம் நடிகர்கள். பிரபல தயாரிப்பாளர் வேதனை). இந்த நிலையில் போதை பொருள் விவகாரத்தில் சிக்கிய 2 நடிகைகள் உட்பட 9 சினிமா பிரபலங்களுக்கு தெலுங்கானா காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே ஐதராபாத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்க்கு போதைபொருட்கள் சப்ளை செய்து வருவதாக தெலுங்கானா காவல்துறையினர்களுக்கு புகார் வந்து கொண்டிருந்ததால் இதுகுறித்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் மாணவர்களுக்கு போதைப்பொருட்களை விற்று வந்த கும்பலை காவல்துறை சமீபத்தில் அதிரடியாக கைது செய்தது
இவர்களிடம் நடத்திய விசாரணையில் போதை பொருட்கள் விற்பனையின் பின்னணியில் இரண்டு முன்னணி நடிகைகள் உள்பட சில திரையுலக பிரபலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த பிரபலங்களை விசாரணைக்கு வருமாறு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வரும் பஞ்சாப் நடிகை உள்பட 9 பேர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படினும் அவர்களுடைய பெயர்களை காவல்துறையினர் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.