close
Choose your channels

சென்னை, கும்பகோணம், பொள்ளாச்சியில் "அரண்மனை 2"

Wednesday, August 12, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட்டில் பேய்ப்பட சீசன் தொடங்கிய ஆரம்பகட்டத்தில் வெளிவந்த சுந்தர் சியின் 'அரண்மனை' சூப்பர்ஹிட் ஆகியதை தொடர்ந்து, அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க சுந்தர் சி திட்டமிட்டு அதற்கான ஆரம்பகட்ட பணிகளை இதுவரை செய்துவந்தார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.


முதல்கட்டமாக இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும், அதன் தொடர்ச்சியாக கும்பகோணத்தில் பத்து தினங்களும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளிநாட்டிலும் படமாக்கப்படவுள்ளது.

சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, சூரி, கோவை சரளா, மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சுந்தர் சியின் 'ஆம்பள' படத்தில் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.