close
Choose your channels

டிடிவி தினகரன் நள்ளிரவில் கைது. இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

Wednesday, April 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒருங்கிணைந்த அதிமுகவின் சின்னமான இரட்டை இல்லை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட புகாரில், டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கடந்த நான்கு நாட்களாக விசாரணை செய்த நிலையில் நேற்று நள்ளிரவில் அவரை கைது செய்துள்ளனர்.

அதிமுகவின் இரட்டை இலை சின்னதை பெற்று தர லஞ்சம் வாங்கியதாக தலைநகர் டெல்லியில் சுகேஷ் சந்திரா என்பவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டிடிவி தினகரனிடம் இருந்து ரூ.1.30 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக வாக்குமூலம் பெறப்பட்டது. இதன் அடிப்படையில், இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர லஞ்சம் கொடுத்ததாக, டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்

இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்ய டிடிவி தினகரன் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பபட்டது. இந்த சம்மனை ஏற்று கடந்த 22-ம் தேதி டெல்லி போலீசார் முன் தினகரன் நேரில் ஆஜரானார். அன்றிலிருந்து, தொடர்ந்து நான்கு நாட்களாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் டிடிவி தினகரன் ஆஜராகி விளக்கம் அளித்து வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு தகுந்த ஆதாரங்கள் இருப்பதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவருடன் அவருடைய நண்பர் மல்லிகார்ஜுனாவையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தினகரனும் அவரது நண்பரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.