close
Choose your channels

அனிதாவுக்கு அஞ்சலி. தினகரனுக்கு உதவி செய்த திருமாவளவன்

Saturday, September 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் மீது அனைவரும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் எடப்பாடி தலைமையிலான அரசே இதற்கு காரணம் என்றும், ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்த நிலை இருந்திருக்காது என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இன்று அதிமுக எத்தனை அணியாக பிரிந்திருந்தாலும் நீட் தேர்வுக்கும், அனிதாவின் மரணத்திற்கும் அத்தனை அணிகளும் பொறுப்பேற்க வேண்டும். ஒரு அணியினர் இன்னொரு அணியினர் மீது குற்றம் சுமத்தி தப்பிக்க முடியாது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் அனிதாவுக்கு அஞ்சலி செலுத்த அவருடைய சொந்த ஊருக்கு சென்ற டிடிவி தினகரனுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தினகரனை பாதுகாப்பாக அழைத்து சென்று அஞ்சலி செலுத்த உதவியதாக செய்திகள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.