close
Choose your channels

ஒருபக்கம் விபூதி, இன்னொரு பக்கம் குங்குமம். தமிழக அரசியலில் ஆன்மீகம்

Tuesday, March 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனியாக பேரவை ஒன்றை ஆரம்பித்து அரசியலில் சமீபத்தில் நுழைந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள அவர் சமீபத்தில் ஜெயலலிதாவின் சமாதியில் சுமார் 45 நிமிடங்கள் தியானம் செய்தார். தியானம் செய்த தீபாவிடம் ஒரு மாற்றம் இருந்ததை கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். அதுதான் குங்குமப்பொட்டு. இதுவரை வெற்று நெற்றியுடன் வலம் வந்து பெண்களின் அதிருப்திக்கு ஆளாகியிருந்த தீபா, வாக்காளர்களை கவரவே மங்களகரமாக குங்குமத்துடன் காணப்படுவதாக கூறப்பட்டது.
தீபாவின் நிலை இப்படியென்றால் முதல்வர் எடப்பாடி பழநிச்சாமியின் நிலை வேறு. முதலமைச்சர் பதவியேற்றது முதல் நெற்றி நிறைய விபூதியுடன் வலம் வந்த முதல்வர் பழநிச்சாமி கடந்த சில தினங்களாக வெற்று நெற்றியுடன் காணப்படுகிறார். முதல்வர் பதவியேற்றவுடன் அவர் தனது குலதெய்வ கோவிலுக்கு சென்று பூஜை செய்ததாகவும், முதல்வர் பதவியில் நீடித்து இருக்க வேண்டும் என்பதற்காக குலதெய்வத்திடம் சிறப்பு பூஜை செய்யப்பட்ட விபூதியை அவர் தினமும் பூசி வருவதாகவும் அதிமுக தலைமையிடம் யாரோ பற்ற வைத்துவிட்டார்களாம்
இதனால் அதிமுக தலைமையிடம் இருந்து இனிமேல் விபூதி வைக்கக்கூடாது என்று கட்டளை வந்ததாகவும், அதன் காரணமாகத்தான் அவர் சில நாட்களாக வெற்றி நெற்றியுடன் வலம்வருவதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் பிரேக்கிங் நியூஸ் இல்லாமல் வாடி வதங்கியுள்ள நெட்டிஸன்களுக்கு இந்த செய்தி வரப்பிரசாதமாக கிடைத்துள்ளது., இதுகுறித்த கிண்டல் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.