close
Choose your channels

உலக மாமேதை ஜெயக்குமாருக்கு பதில் சொல்லும் தகுதி எனக்கு இல்லை. டிடிவி தினகரன்

Monday, June 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமீபத்தில் ஜாமீன் பெற்று சென்னை திரும்பினார். அவருக்கு மேள தாளத்துடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து தன்னை நீக்கும் அதிகாரம் சசிகலாவை தவிர வேறு யாருக்கும் இல்லை என்றும், கட்சிப்பணியில் தொடர்ந்து ஈடுபட போவதாகவும் அறிவித்தார்.
சசிகலா குடும்பத்தினர்களை ஒதுக்கி வைத்துவிட்டு அரசியல் மற்றும் ஆட்சியை தொடர நினைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட மூத்த அமைச்சர்களுக்கு இந்த அறிவிப்பு தர்மசங்கடத்தை கொடுத்தது. இந்த நிலையில் இன்று சசிகலாவை சந்திக்க பெங்களூக்கு கிளம்பினார் டிடிவி தினகரன்
அப்போது செய்தியாளர்கள் அவரிடம் 'நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் வரும் கருத்துக்கும் அதிமுகவின் கருத்துக்கும் சம்பந்தமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறித்து உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூறிய டிடிவி தினகரன், 'ஜெயக்குமார் உலக மேதைகளில் ஒருவர். அவர் சொல்லும் கருத்துக்கு பதில் சொல்லும் அளவிற்கு எனக்கு தகுதி இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவருடைய கருத்துக்கு அவர் உயரத்தில் உள்ள ஒருவர் பதில் சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும் என்று கூறினார்.
ஜெயக்குமார் குறித்து டிடிவி தினகரன் கூறிய இந்த கருத்து ஜெயகுமாரை புகழ்வதற்காக கூறப்பட்டதா? அல்லது கிண்டலுக்கு கூறப்பட்டதா? அல்லது வஞ்சப்புகழ்ச்சியா? என்பதை ஊகிக்கும் பொறுப்பை வாசகர்களிடமே விட்டுவிடுகிறோம். உங்களுடைய கருத்தை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.