close
Choose your channels

டிடிவி தினகரன் ஜாமீன் மனு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Thursday, June 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக குறுக்கு வழியில் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு தற்போது டெல்லி திகார் சிறையில் உள்ளார்.
அவரது ஜாமீன் மனுவின் விசாரணை ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் இன்று டெல்லி நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்படி டிடிவி தினகரன் ரூ.5 லட்சம் செலுத்தி சொந்த ஜாமீனில் செல்ல அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் டிடிவி தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனாவுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது.
மேலும் டிடிவி தினகரன், மல்லிகார்ஜூனா ஆகிய இருவரும் தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.