close
Choose your channels

டிடிவி தினகரனுக்கும், சுகேஷ் சந்திரசேகருக்கும் எந்த தொடர்பும் இல்லை - தீபா

Friday, April 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நாளை டெல்லி போலீசார் முன் டிடிவி தினகரன் ஆஜராகி விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கும் சுகேஷ் சந்திரசேகரின் வழக்கறிஞர் தீபா முருகேசன் இன்று டெல்லி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளர். அந்த மனுவில், 'டிடிவி தினகரனுக்கும், சுகேஷ் சந்திரசேகருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இது அரசியல் காரணங்களுக்காக போடப்பட்ட வழக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுமீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டெல்லி போலீசார் முன் ஆஜராவதற்கு தனக்கு மூன்று நாள் கால அவகாசம் வேண்டும் என்று தினகரன் தரப்பு டெல்லி போலிசாரிடம் கேட்டுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த அவகாசத்தை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் நிராகரித்தனர். இதையடுத்து, நாளை டெல்லியில் தினகரன் ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.