close
Choose your channels

இரட்டை இலை லஞ்ச விவகாரத்தில் தினகரன் கைதா? சென்னை வருகிறது டெல்லி போலீஸ்

Monday, April 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இரட்டை இலை சின்னத்தை குறுக்கு வழியில் பெறுவதற்காக அதிமுக அம்மா அணியின் டிடிவி தினகரன் ரூ.60 கோடி வரை பேரம் பேசியதாகவும், அதற்கு அட்வான்ஸாக ரூ.1.30 கோடி வரை பெற்றதாகவும் டெல்லியில் சுகேஷ் சந்தர் என்பவர் இன்று காலை செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் டிடிவி தினகரன் மீதும் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இரட்டை இலை சின்னம் குறித்து தான் யாருக்கும் லஞ்சம் கொடுக்கவில்லை என்றும் சுகேஷ் சந்தர் என்பவர் தனக்கு யார் என்றே தெரியாது என்றும் தினகரன் மறுத்துள்ளதை சற்று முன் பார்த்தோம்.

இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த, ஏ.சி.பி சஞ்சய் ராவத் என்ற அதிகாரி தலைமையில் டெல்லி போலீஸ் நாளை சென்னை வரவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சுகேஷின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும், இதனால் டி.டி.வி.தினகரனுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளதாகவும், நாளை நடைபெறும் விசாரணையில் தினகரன் லஞ்சம் கொடுத்தது உறுதி செய்யப்படும் பட்சத்தில்,அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.