close
Choose your channels

'இரட்டை இலை' முடக்கம். சுயேட்சை வேட்பாளர்களாக மாறிய டிடிவி தினகரன் - மதுசூதனன்

Thursday, March 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை கட்டுக்கோப்பாக இருந்த அதிமுக, அவர் மறைந்த ஒருசில நாட்களில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக உடைந்தது. ஆர்.கே.நகர் தொகுதியில் இரு அணிகளும் போட்டியிடுவதால் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை தங்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தன.

இதுகுறித்த விசாரணை நேற்று தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றது. இரு அணிகளின் வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதத்தை எடுத்துரைத்தனர். இரு அணிகளின் வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணையம், நேற்று நள்ளிரவு 'இரட்டை இலை' சின்னத்தை' முடக்குவதாக அறிவித்தது.

அதுமட்டுமின்றி அதிமுக என்ற கட்சியின் பெயரை இரு அணிகளும் பயன்படுத்த கூடாது என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் காரணமாக இரு அணியின் ஆர்.கே.நகர் வேட்பாளர்களும் சுயேட்சை வேட்பாளர்களாக கருதப்படுவார்கள். இன்று காலை இரு அணிகளும் தங்கள் சின்னத்தை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.