close
Choose your channels

இந்த கம்பீரம் அந்த 122 பேர்களுக்கு இருக்குதா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி

Thursday, March 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சசிகலா ஆதரவாளரான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்த 122 எம்.எல்.ஏக்கள் பொதுமக்களின் அதிருப்தியை பெற்று சொந்த தொகுதிக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் இந்த 122 எம்.எல்.ஏக்கள் குறித்து நடிகரும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் நகைச்சுவையுடன் விமர்சனம் செய்துள்ளார்.
இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி பேசியபோது, 'தற்போது 122 சட்டமன்ற உறுப்பினர்களின் நிலைமை என்னவென்று அனைவருக்கும் தெரியும். சொந்த தொகுதிக்கு செல்லும்போது கூட துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போலீசாருடன் தான் செல்ல வேண்டிய நிலை அவர்களுக்கு உள்ளது. 122 பேர்களின் நிலைமை அவ்வாறு இருக்க இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கும் இரண்டு திமுக எம்.எல்.ஏக்கள் எவ்வளவு கம்பீரமாக இருக்கின்றார்கள் என்று பாருங்கள். இவர்கள் போல் அந்த 122 எம்.எல்.ஏக்களால் இருக்க முடியுமா? என்று நகைச்சுவையுடன் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.