close
Choose your channels

'அட்ஜெஸ்ட்மெண்ட்' குறித்து நடிகை லேகா வாஷிங்டனின் அனுபவம்

Friday, March 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'ஜெயம்கொண்டான்', உன்னாலே உன்னாலே', கல்யாண சமையல் சாதம்' உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்தவர் நடிகை லேகா வாஷிங்டன். சமீப காலமாக உலவி வரும் நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து தனது அனுபவங்களை பிரபல இதழ் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

ஒரு பிரபலமான இயக்குனர் எனக்கு அவர் படத்தில் ஒரு நல்ல வாய்ப்பு தருவதாக கூறினார். அதற்கு பதிலாக அவர் என்னிடம் அட்ஜெஸ்ட்மெண்ட்டை எதிர்பார்த்தார். ஆனால் நான் அதற்கு இடம் தரவில்லை. இந்த விஷயத்தில் அவர் என்னை கன்வின்ஸ் செய்ய முயன்றும் அவருக்கு தோல்வியே கிடைத்தது. இதனால் நான் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமலும் போனது.

சில நாட்கள் கழித்து அதே இயக்குனர் வேறொரு முன்னணி நடிகையுடன் அதே படத்திற்காக வெளிநாட்டுக்கு படப்பிடிப்புக்கு சென்றார். ஆனால் அதிக டோஸ் வயாக்ரா பயன்படுத்தியதால் அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக செய்தி வெளிவந்தது. இந்த சம்பவம் எனக்கு விதி வலியது என்பதை உணர்த்தியது. இவ்வாறு நடிகை லேகா வாஷிங்டன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.