close
Choose your channels

புழல் சிறையில் வைகோ. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு ஏன்?

Monday, April 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தேச துரோக வழக்கில் 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த, 2009ஆம் ஆண்டு, சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அவர் மீது பதிவு செய்யப்பட்ட தேசத் துரோக வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கில் தான் ஜாமீனில் செல்ல விரும்பில்லை என்று நீதிமன்றத்தில் வைகோ கூறியதையடுத்து, அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் வைகோ புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.